×

பொதக்குடியில் சந்தனக்கூடு ஊர்வலம்

நீடாமங்கலம், டிச.24: நீடாமங்கலம் ஒன்றியம் பொதக்குடி ஹஜ்ரத் நூர் முஹம்மது ஷாஹ் ஒலியுல்லாஹ் தர்காவில் நடைபெற்ற சந்தனக்கூடு ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பொதக்குடியில் ஹஜ்ரத் நூர் முஹம்மது ஷாஹ் ஒலியுல்லாஹ் தர்காவில் ஆண்டுதோறும் சந்தனகூடு நடைபெறுவது வழக்கம். கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து பூலாங்கொடி ஏற்றமும், பெரிய மினார் கொடியேற்றமும் நடைபெற்றது. நேற்றுமுன்தினம் இரவு துவா ஓதி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக் கூடு ஊர்வலம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பொதக்குடி, அத்திக்கடை, பூதமங்கலம், கூத்தாநல்லூர், அதங்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து இஸ்லாமியர்கள், இந்து மதத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். சந்தனக்கூடு விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் திருவாரூர் பூண்டி கலைவாணன், மன்னார்குடி டி.ஆர்.பி.ராஜா, மன்னார்குடி கோட்டாட்சியர் அழகர்சாமி, நீடாமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன், பொதக்குடி ஊராட்சி தலைவர் மல்லிகா பிச்சையன் உள்ளிட்ட மக்கள் பிரதி நிதிகள், அரசு அலுவலர்கள், பலர் கலந்து கொண்டனர்.

Tags : Pothakudi ,
× RELATED நீடாமங்கலம் அருகே மின்னொளியில் மின்னிய சந்தனக்கூடு ஊர்வலம்